விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் ஊழியர்களை ஆனைமலை டிஎஸ்பி பவித்ரா எச்சரித்தார்.


Coimbatore: கோவை: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 அரசு மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டதுடன், போதைப் பொருள் மற்றும் கள்ளச்சந்தை மது விற்பனையை கண்காணிக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



இதன் தொடர்ச்சியாக, ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர், வேட்டைக்காரன்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு வால்பாறை உட்கோட்ட டிஎஸ்பி பவித்ரா தலைமையிலான காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது கடை ஊழியர்களிடம் பேசிய டிஎஸ்பி பவித்ரா, “டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்குள் கட்டாயம் மூடப்பட வேண்டும். ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் மொத்தமாக விற்பனை செய்யக் கூடாது. விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதுடன், கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரித்தார்.

மேலும், கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...