தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்த தகவல்களை வழங்க வரும் 7-ம் தேதி கிராமசபைக் கூட்டம் கூடுகிறது

கோவை, நவம்பர் 3 : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அன்னூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான தகவல்களை வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் 7-ம் தேதி நடக்கிறது. 

2016 - 2017 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கடந்த மாதம் 30-ம் தேதி முதல் வரும் 07-ம் தேதி வரை சமூக தணிக்கை மேற்கொள்ள,  ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார். 

கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்போதி, காட்டம்பட்டி, ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாத்தூர், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குளத்துப்பாளையம், பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கபூலிபாளையம், கல்லிப்பட்டி, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜல்லிபட்டி, பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழையூர், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெம்மரம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் இந்த தணிக்கையை மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல்கள் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 11.00 மணியளவில் நடக்கும் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...