தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்த தகவல்களை வழங்க வரும் 7-ம் தேதி கிராமசபைக் கூட்டம் கூடுகிறது

கோவை, நவம்பர் 3 : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அன்னூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான தகவல்களை வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் 7-ம் தேதி நடக்கிறது. 

2016 - 2017 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கடந்த மாதம் 30-ம் தேதி முதல் வரும் 07-ம் தேதி வரை சமூக தணிக்கை மேற்கொள்ள,  ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார். 

கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்போதி, காட்டம்பட்டி, ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாத்தூர், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குளத்துப்பாளையம், பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கபூலிபாளையம், கல்லிப்பட்டி, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜல்லிபட்டி, பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழையூர், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெம்மரம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் இந்த தணிக்கையை மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல்கள் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 11.00 மணியளவில் நடக்கும் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...