செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முழுமையாக இணைந்த மலைவாழ் கிராமங்கள்

கோவை, நவம்பர் 1 : கோவை மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைந்தனர். 

பாரத பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட செல்வமகள் சேமிப்புதிட்டம் 10 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு மட்டுமே உரிய திட்டமாகும். அதிக வட்டிவிகிதம் கொண்ட இந்தத் திட்டம் மக்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றது. மலைவாழ் மக்களிடம் அஞ்சல்துறையின் நலதிட்டங்கள் சென்றடையும் வகையில்,  பாலமலை பகுதியில் அமைந்துள்ள மாங்குலி பசுமணி, பசுமணிப்புதூர், பெரும்பதி, பெருக்குபதி, குஞ்சூர்பதி, ராயரூத்துபதி ஆகிய மலைவாழ் கிராமத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு செல்வமகள்  சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டது.

இதற்காக, கடந்த மாதம் 10-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்குப் புத்தகங்களை வழங்கினார். விழாவில் பிறந்து 9 மாதங்களே ஆன குழந்தைகளுக்குக் கூட கணக்கு தொடங்கப்பட்டது சிறப்பு அம்சமாகும்.

தொடர்ந்து, விழாவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி பேசுகையில், அஞ்சல்துறையின் மகத்தான சேவைகள் இன்னும் தொடர வேண்டும். அதற்கு முழு ஒத்துமழைப்பு அளிக்கப்படும். இவ்வாறு கூறினார். 

இறுதியில், மலைவாழ் மக்களுக்கு கணக்கு துவங்க உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...