வால்பாறையில் 20 சதவிகிதம் போனஸ் வழங்கக் கோரி தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

கோவை, நவம்பர் 1: வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறை அடுத்துள்ள சோலையார் பகுதியில் ஜெய்ஸ்ரீ தனியார் எஸ்டேட் நிர்வாகத்திற்குச் சொந்தமாக நான்கு எஸ்டேட்டுகள் உள்ளது. இதில் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எஸ்டேட் நிர்வாகத்தினால் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 10 தினங்களுக்கு முன்பாகவே வழங்கப்படுவது வழக்கம்.



இந்த நிலையில் நடப்பாண்டுக்கான போனஸ் 8.33 சதவிகிதமாக குறைத்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் போனஸ் தொகையினை வாங்க மறுத்து 20 சதவிகிதம் போனஸ் வேண்டும் என்று கடந்த அக்டோபர் 7-ம் தேதியன்று தொழிற்சாலை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தொடர் போராட்டம் நடத்தி வந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தை தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கேசவ முருகன், ஐஎன்டியுசி பிரபாகரன் மற்றும் சிஐடியு கம்யூனிஸ்ட் கட்சி ராஜன் ஆகிய தொழிற்சங்கங்களுடன் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினர் கடந்த 27ம் தேதி கோவையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதிலும் உடன்பாடு ஏற்படாததால் தொழிற்சங்கத்தினர் 20 சதவிகிதம் போனஸை எஸ்டேட் நிர்வாகம் வழங்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தனர். 

இதனைத்தொடர்ந்து, மேற்கண்ட தொழிற்சங்கங்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து இன்று 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...