வால்பாறையில் 20 சதவிகிதம் போனஸ் வழங்கக் கோரி தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

கோவை, நவம்பர் 1: வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறை அடுத்துள்ள சோலையார் பகுதியில் ஜெய்ஸ்ரீ தனியார் எஸ்டேட் நிர்வாகத்திற்குச் சொந்தமாக நான்கு எஸ்டேட்டுகள் உள்ளது. இதில் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எஸ்டேட் நிர்வாகத்தினால் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 10 தினங்களுக்கு முன்பாகவே வழங்கப்படுவது வழக்கம்.



இந்த நிலையில் நடப்பாண்டுக்கான போனஸ் 8.33 சதவிகிதமாக குறைத்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் போனஸ் தொகையினை வாங்க மறுத்து 20 சதவிகிதம் போனஸ் வேண்டும் என்று கடந்த அக்டோபர் 7-ம் தேதியன்று தொழிற்சாலை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தொடர் போராட்டம் நடத்தி வந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தை தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கேசவ முருகன், ஐஎன்டியுசி பிரபாகரன் மற்றும் சிஐடியு கம்யூனிஸ்ட் கட்சி ராஜன் ஆகிய தொழிற்சங்கங்களுடன் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினர் கடந்த 27ம் தேதி கோவையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதிலும் உடன்பாடு ஏற்படாததால் தொழிற்சங்கத்தினர் 20 சதவிகிதம் போனஸை எஸ்டேட் நிர்வாகம் வழங்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தனர். 

இதனைத்தொடர்ந்து, மேற்கண்ட தொழிற்சங்கங்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து இன்று 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...