விபத்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி

கோவை, அக்டோபர் 31: கடந்த 2015-ம் ஆண்டு மதுக்கரை அருகே அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காத பேருந்தை கோவை முதலாவது சார்பு நீதிமன்றம் ஜப்தி செய்தது. 



மதுக்கரை அருகேயுள்ள ஒக்கிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த கிட்டான் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து மோதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அரசு பேருந்து மோதி பலியான கிட்டான் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சத்து 86 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது. இதனை அரசு போக்குவரத்து கழகம் இதுவரை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. 

இந்த நிலையில், உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக்கோரி கிட்டானின் மனைவி பாப்பாத்தி கோவை முதலாவது சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 7.5 சதவீத வட்டியுடன் ரூ. 5 லட்சத்து 11 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டும், அதை போக்குவரத்து கழகம் வழங்காததால், பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி, அதிகாரிகள், அரசுப் பேருந்தை பறிமுதல் செய்தனர். 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...