டெங்குவின் புகலிடமாகும் கலிக்கநாயக்கன்பாளைய கழிவுநீர் சாக்கடைகள்

கோவை, அக்டோபர் 29: டெங்கு மற்றும் அதன் விளைவுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை புறநகர் பகுதியான கலிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் சுகாதார சீர்கேட்டினால் இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது வேதனையளிப்பதாக அமைந்துள்ளது.



குப்பைத் தொட்டிகள் மற்றும் அசுத்தங்கள் நிறைந்த கழிவுநீர் சாக்கடைகள் போதிய பராமரிப்பின்றி திறந்த நிலையில் விடப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் அப்பகுதி குடியிருப்பு வாசிகள். இதன் விளைவாக இக்கிராமத்தில் ஒன்பது வயது பெண் குழந்தைக்கு டெங்கு அறிகுறிகள் ஏற்பட்டு தற்போது கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



கலிக்கநாயக்கன்பாளையம், 6-வது வார்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள எஸ்.ஜோதிமணி (60) எனும் தனது தாத்தா வீட்டிற்கு மதுக்கரையில் இருந்து ஜே. சவுதிகா (6) வந்துள்ளார். அங்கு வசித்து வந்த அவருக்கு சில நாட்களில் காய்ச்சல் ஏற்படவே தொண்டாமுத்தூர் பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சவுதிகாவிற்கு டெங்கு அறிகுறிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, கோவை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுதிகாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சிகிச்சைக்குப் பின் சிறுமியின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்திருந்தாலும் அக்கிராமத்தில் இது முதல் டெங்கு பாதிப்பு என்பதால் உள்ளூர் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து, கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கே.எம்.பரதன் கூறுகையில், 'இப்பகுதியில் உள்ள சாக்கடைக் கால்வாய்களை முறையாக மூடி வைக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். மேலும், குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படாததால் பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடையிலேயே வீசப்படுகின்றன. இவை மொத்தமுமாக அடைக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துப்புரவுப் பணியாளர்களும் உரிய நேரத்தில் இதனை சுத்தம் செய்வதில்லை. நகர் முழுவதும் டெங்கு உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்கள் பரவிவரும் சூழ்நிலையில் இங்கு அதிகளவிலாக டெங்கு கொசுகள் உருவாகி தற்போது ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார்' என்றார்.



இதுகுறித்து கருத்துகேட்கும் வகையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர்கள் தொடர்ந்து அழைப்பை புறக்கணித்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...