டெங்குவின் புகலிடமாகும் கலிக்கநாயக்கன்பாளைய கழிவுநீர் சாக்கடைகள்

கோவை, அக்டோபர் 29: டெங்கு மற்றும் அதன் விளைவுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை புறநகர் பகுதியான கலிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் சுகாதார சீர்கேட்டினால் இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது வேதனையளிப்பதாக அமைந்துள்ளது.



குப்பைத் தொட்டிகள் மற்றும் அசுத்தங்கள் நிறைந்த கழிவுநீர் சாக்கடைகள் போதிய பராமரிப்பின்றி திறந்த நிலையில் விடப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் அப்பகுதி குடியிருப்பு வாசிகள். இதன் விளைவாக இக்கிராமத்தில் ஒன்பது வயது பெண் குழந்தைக்கு டெங்கு அறிகுறிகள் ஏற்பட்டு தற்போது கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



கலிக்கநாயக்கன்பாளையம், 6-வது வார்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள எஸ்.ஜோதிமணி (60) எனும் தனது தாத்தா வீட்டிற்கு மதுக்கரையில் இருந்து ஜே. சவுதிகா (6) வந்துள்ளார். அங்கு வசித்து வந்த அவருக்கு சில நாட்களில் காய்ச்சல் ஏற்படவே தொண்டாமுத்தூர் பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சவுதிகாவிற்கு டெங்கு அறிகுறிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, கோவை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுதிகாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சிகிச்சைக்குப் பின் சிறுமியின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்திருந்தாலும் அக்கிராமத்தில் இது முதல் டெங்கு பாதிப்பு என்பதால் உள்ளூர் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து, கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கே.எம்.பரதன் கூறுகையில், 'இப்பகுதியில் உள்ள சாக்கடைக் கால்வாய்களை முறையாக மூடி வைக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். மேலும், குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படாததால் பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடையிலேயே வீசப்படுகின்றன. இவை மொத்தமுமாக அடைக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துப்புரவுப் பணியாளர்களும் உரிய நேரத்தில் இதனை சுத்தம் செய்வதில்லை. நகர் முழுவதும் டெங்கு உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்கள் பரவிவரும் சூழ்நிலையில் இங்கு அதிகளவிலாக டெங்கு கொசுகள் உருவாகி தற்போது ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார்' என்றார்.



இதுகுறித்து கருத்துகேட்கும் வகையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர்கள் தொடர்ந்து அழைப்பை புறக்கணித்தனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...