புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடைகள் சேதம்

மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளிலிருந்து பயனிகள் இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள நடைமேடைகள் தொடர்ந்து சிதிலமடைந்து வருகின்றன.

இன்று மாலை 4மணியளவில் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த 10C பேருந்து (TN 38 N2263), அதிவிரைவாக வளைந்து நடைமேடையை இடித்ததால் நடைமேடை முழுவதும் சேதமடைந்துள்ளது. அதிர்ஷடவசமாக அதன் அருகே நின்றிருந்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.



இச்சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் கூறியதாவது,:  அதிவேகமாக பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த பேருந்து, நிறுத்துவதற்காக வலதுபுறம் திருப்பப்பட்டது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நேராக நடைமேடையில் இடித்து நின்றது. இதனால் நடைமேடை முற்றிலுமாக உடைந்து நொறுங்கியது..

சரியாக பேருந்தை நிறுத்தக்கூட தெரியாத ஓட்டுநர்கள், எப்படி ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பார்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது' என்றார்.

பேருந்து நிலைய கண்காளிப்பாளரிடம் இச்சம்பவம் பற்றி கேட்டபோது, நகரப் பேருந்துகள் உள்ளே நிறுத்துவதற்கு அனுமதியே இல்லை என்பது தெரிய வந்தது.

அரசு விதிகளையும் சாலை விதிகளையும் அலட்சியமாக கடந்து செல்லும் ஓட்டுநர்கள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...