புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடைகள் சேதம்

மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளிலிருந்து பயனிகள் இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள நடைமேடைகள் தொடர்ந்து சிதிலமடைந்து வருகின்றன.

இன்று மாலை 4மணியளவில் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த 10C பேருந்து (TN 38 N2263), அதிவிரைவாக வளைந்து நடைமேடையை இடித்ததால் நடைமேடை முழுவதும் சேதமடைந்துள்ளது. அதிர்ஷடவசமாக அதன் அருகே நின்றிருந்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.



இச்சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் கூறியதாவது,:  அதிவேகமாக பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த பேருந்து, நிறுத்துவதற்காக வலதுபுறம் திருப்பப்பட்டது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நேராக நடைமேடையில் இடித்து நின்றது. இதனால் நடைமேடை முற்றிலுமாக உடைந்து நொறுங்கியது..

சரியாக பேருந்தை நிறுத்தக்கூட தெரியாத ஓட்டுநர்கள், எப்படி ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பார்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது' என்றார்.

பேருந்து நிலைய கண்காளிப்பாளரிடம் இச்சம்பவம் பற்றி கேட்டபோது, நகரப் பேருந்துகள் உள்ளே நிறுத்துவதற்கு அனுமதியே இல்லை என்பது தெரிய வந்தது.

அரசு விதிகளையும் சாலை விதிகளையும் அலட்சியமாக கடந்து செல்லும் ஓட்டுநர்கள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...