கந்துவட்டி தொடர்பாக காவல் நிலயங்களில் புகார் பெற மறுத்தால் டி.எஸ்.பி.க்களிடம் புகார் அளிக்கலாம் - கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கோவை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் கந்து வட்டி தொடர்பான புகார்களை ஏற்க மறுத்தால் அந்தந்த காவல் எல்லைகளுக்கு  உட்பட்ட மாவட்ட துணை கண்காணிப்பாளர்களிடம் புகார் அளிக்கலாம் என்று  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.Pa.மூர்த்தி தெரிவித்துள்ளார். 

கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நெல்லை மாவட்ட ஆட்சியர் முன்பு  தீக்குளித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இச்சம்பவத்தை தொடர்ந்து, கந்து வட்டி தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டார். 

இதுதொடர்பாக, டாக்டர்.Pa.மூர்த்தி சிம்ப்ளி-சிட்டிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது :- 

நம் நாட்டில் கந்துவட்டி பிரச்சனை என்பது கடந்த 1500 ஆண்டுகளுக்கு   முன்பு இருந்தே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இதனால் பல குடும்பங்கள்  கொடுமைகளை அனுபவித்த கதைகளை  வரலாறு நமக்கு தெரியப்படுத்துகிறது. இன்னும் இந்தநிலை தொடர்ந்து கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.  

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படும் மக்கள் தைரியமாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். இது தொடர்பாக புகார்கள் ஏதேனும் வந்தால் உடனடியாக புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து காவல்  நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சட்ட விதிமுறைகள் காரணமாக காவல் நிலையங்களில் கந்து வட்டி தொடர்பான புகார்களை ஏற்க மறுத்தால் உடனடியாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களிடம் புகார் அளிக்கலாம்.  

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை காவல் எல்லைகள் 5 சரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.பேரூர்,பெரியநாயக்கன்பாளையம், கருமத்தம்பட்டி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி என்று பிரிக்கப்பட்டுள்ள இந்த சரகங்களுக்கு தனித்தனியே துணை மாவட்ட காவல் கண்காளிப்பாளராகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம். அல்லது என்னிடம் புகார் தெரிவிக்கலாம். 

கந்துவட்டி தொடர்பாக  வரும் புகார்களின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

கோவை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  அலுவலக தொலைபேசி எண் : 0422-2300600

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...