கந்துவட்டி தொடர்பாக காவல் நிலயங்களில் புகார் பெற மறுத்தால் டி.எஸ்.பி.க்களிடம் புகார் அளிக்கலாம் - கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கோவை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் கந்து வட்டி தொடர்பான புகார்களை ஏற்க மறுத்தால் அந்தந்த காவல் எல்லைகளுக்கு  உட்பட்ட மாவட்ட துணை கண்காணிப்பாளர்களிடம் புகார் அளிக்கலாம் என்று  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.Pa.மூர்த்தி தெரிவித்துள்ளார். 

கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நெல்லை மாவட்ட ஆட்சியர் முன்பு  தீக்குளித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இச்சம்பவத்தை தொடர்ந்து, கந்து வட்டி தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டார். 

இதுதொடர்பாக, டாக்டர்.Pa.மூர்த்தி சிம்ப்ளி-சிட்டிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது :- 

நம் நாட்டில் கந்துவட்டி பிரச்சனை என்பது கடந்த 1500 ஆண்டுகளுக்கு   முன்பு இருந்தே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இதனால் பல குடும்பங்கள்  கொடுமைகளை அனுபவித்த கதைகளை  வரலாறு நமக்கு தெரியப்படுத்துகிறது. இன்னும் இந்தநிலை தொடர்ந்து கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.  

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படும் மக்கள் தைரியமாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். இது தொடர்பாக புகார்கள் ஏதேனும் வந்தால் உடனடியாக புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து காவல்  நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சட்ட விதிமுறைகள் காரணமாக காவல் நிலையங்களில் கந்து வட்டி தொடர்பான புகார்களை ஏற்க மறுத்தால் உடனடியாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களிடம் புகார் அளிக்கலாம்.  

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை காவல் எல்லைகள் 5 சரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.பேரூர்,பெரியநாயக்கன்பாளையம், கருமத்தம்பட்டி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி என்று பிரிக்கப்பட்டுள்ள இந்த சரகங்களுக்கு தனித்தனியே துணை மாவட்ட காவல் கண்காளிப்பாளராகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம். அல்லது என்னிடம் புகார் தெரிவிக்கலாம். 

கந்துவட்டி தொடர்பாக  வரும் புகார்களின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

கோவை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  அலுவலக தொலைபேசி எண் : 0422-2300600

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...