காட்டு யானை முன்பு நின்று செல்பி எடுத்த வாலிபர்களுக்கு அபராதம்

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையின் முன்பு நின்று செல்பி எடுத்த வாலிபர்களுக்கு தமிழக வனத்துறையினர் அபாரதம் விதித்தனர். 

தமிழக வனத்துறையின் கீழ் உள்ள கோவை வனச்சரகத்தில் யானை, மான் உள்ளிட்ட காட்டு விலங்குகள் அதிகம் உள்ளன. அவைகள் அவ்வப்போது, குடியிருப்புப் பகுதிகளுக்கோ அல்லது சாலைகளுக்கோ வந்து செல்லும். அப்போது, தற்போதைய இளைஞர்கள் செல்பி எடுப்பதற்காக, வனவிலங்குகளை தொந்தரவு செய்து வருவது வாடிக்கையாகி வந்தது. 



இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

இந்த நிலையில், கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையின் முன்பு நின்று வாலிபர்கள் செல்பி எடுப்பது வனத்துறையினருக்கு தெரிய வந்தது. உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள், கார்த்திக், ரஞ்சித்குமார், பிரகாஷ்குமார் ஆகியோரை பிடித்து, கடுமையான எச்சரிக்கை விடுத்துடன், தலா ரூ.5,000 அபராதம் விதித்தனர். 

இதனிடையே, புகைப்படம், செல்பி எடுப்பது உள்ளிட்ட மோசமான நடவடிக்கைகளால் வனவிலங்குகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில், யாரேனும் நடந்து கொண்டாலோ, அல்லது அவசர உதவிக்கோ 180042545456 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.  

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...