கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் அருகே முதியவரை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆர்.எஸ். புரத்தை அடுத்த பொம்ம நாயக்கன் வீதியில் வசிப்பவர் நடேசன். இவரது தந்தை ராமமூர்த்தி (62). இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் இருதயராஜா, பழனியம்மாள் (36) என்ற தம்பதியினர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். கடந்த 2016 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பழனியம்மாளிடம், ராமமூர்த்தி வீட்டை காலி செய்யுமாறு கூறினார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், கோபமடைந்த பழனியம்மாள், ராமமூர்த்தியை கீழே தள்ளினார். இதில், தடுமாறிய அவர் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தார். தலையில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராமமூர்த்தி உயிரிழந்தார்.
இது தொடர்பாக, ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியம்மாளை கைது செய்தனர். இந்த வழக்கு இன்று (அக்.,25) கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பழனியம்மாளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினர்.
ஆர்.எஸ். புரத்தை அடுத்த பொம்ம நாயக்கன் வீதியில் வசிப்பவர் நடேசன். இவரது தந்தை ராமமூர்த்தி (62). இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் இருதயராஜா, பழனியம்மாள் (36) என்ற தம்பதியினர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். கடந்த 2016 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பழனியம்மாளிடம், ராமமூர்த்தி வீட்டை காலி செய்யுமாறு கூறினார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், கோபமடைந்த பழனியம்மாள், ராமமூர்த்தியை கீழே தள்ளினார். இதில், தடுமாறிய அவர் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தார். தலையில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராமமூர்த்தி உயிரிழந்தார்.
இது தொடர்பாக, ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியம்மாளை கைது செய்தனர். இந்த வழக்கு இன்று (அக்.,25) கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பழனியம்மாளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினர்.