முதியவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் அருகே முதியவரை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

ஆர்.எஸ். புரத்தை அடுத்த பொம்ம நாயக்கன் வீதியில் வசிப்பவர் நடேசன். இவரது தந்தை ராமமூர்த்தி (62). இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் இருதயராஜா, பழனியம்மாள் (36) என்ற தம்பதியினர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். கடந்த 2016 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பழனியம்மாளிடம், ராமமூர்த்தி வீட்டை காலி செய்யுமாறு கூறினார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், கோபமடைந்த பழனியம்மாள், ராமமூர்த்தியை கீழே தள்ளினார். இதில், தடுமாறிய அவர் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தார். தலையில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராமமூர்த்தி உயிரிழந்தார்.  

இது தொடர்பாக, ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியம்மாளை கைது செய்தனர். இந்த வழக்கு இன்று (அக்.,25) கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பழனியம்மாளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...