நகரில் உள்ள அனைத்து குளங்களையும் பராமரிக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) வலியுறுத்தல்


கோவையில் உள்ள குளங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)-யின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)-யின் கோவை மாநகர செயலாளர் வேல்முருகன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகராட்சி 21-வது வட்டம் முத்தண்ணன் குளம் உள்பட பல குளங்கள் பல ஆண்டுகளாக நச்சுக்கழிவு நீரால் நிரம்பியுள்ளது. இதனால், நிலத்தடி நீர் மாசடைந்து, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

இந்த நீரில் மிகக் கடுமையான பேக்டீரியாக்கள், அமினோ அமிலங்கள் மிகக் கூடுதலாக உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குடிக்கவோ, வேறு பயன்பாட்டிற்கோ நீரை உபயோகித்தால், பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. தற்போது, இந்த நீரைப் பயன்படுத்தி வரும் மேற்படி பகுதி மக்களும், கால்நடைகளும் நோய்களுக்கும், பல்வேறு சிரமங்களுக்கும் ஆட்படுவதுடன் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கும் ஆளாக நேரிடும்.



எனவே, முத்தண்ணன் குளம் உள்பட நகரில் உள்ள அனைத்துக் குளங்களிலும், தேக்கி வைத்துள்ள நச்சுக்கழிவு நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். குளங்களுக்கு வரும் நச்சுக் கழிவு நீரை பாதாள சாக்கடையில் இணைத்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப போர்கால நடவடிக்கை எடுத்து, நிலத்தடி நீர் மேலும் மோசமடையாமல் காக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...