நகரில் உள்ள அனைத்து குளங்களையும் பராமரிக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) வலியுறுத்தல்


கோவையில் உள்ள குளங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)-யின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)-யின் கோவை மாநகர செயலாளர் வேல்முருகன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகராட்சி 21-வது வட்டம் முத்தண்ணன் குளம் உள்பட பல குளங்கள் பல ஆண்டுகளாக நச்சுக்கழிவு நீரால் நிரம்பியுள்ளது. இதனால், நிலத்தடி நீர் மாசடைந்து, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

இந்த நீரில் மிகக் கடுமையான பேக்டீரியாக்கள், அமினோ அமிலங்கள் மிகக் கூடுதலாக உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குடிக்கவோ, வேறு பயன்பாட்டிற்கோ நீரை உபயோகித்தால், பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. தற்போது, இந்த நீரைப் பயன்படுத்தி வரும் மேற்படி பகுதி மக்களும், கால்நடைகளும் நோய்களுக்கும், பல்வேறு சிரமங்களுக்கும் ஆட்படுவதுடன் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கும் ஆளாக நேரிடும்.



எனவே, முத்தண்ணன் குளம் உள்பட நகரில் உள்ள அனைத்துக் குளங்களிலும், தேக்கி வைத்துள்ள நச்சுக்கழிவு நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். குளங்களுக்கு வரும் நச்சுக் கழிவு நீரை பாதாள சாக்கடையில் இணைத்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப போர்கால நடவடிக்கை எடுத்து, நிலத்தடி நீர் மேலும் மோசமடையாமல் காக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டது. 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...