நீரா பயிற்சி வகுப்புகளை தொடங்கி தென்னை விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் தென்னை சாகுபடியின் பரப்பளவு ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பருவமழை குறைவு, நீர்பற்றாக்குறை, இயற்கை இடர்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் நெல் உட்பட தானியங்கள் பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைந்து வருகிறது.
மேற்கண்ட நிலங்களில் தென்னையை உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தென்னையில் இளநீர், நீரா, வெல்லம், தேங்காய், எண்ணைய், சிரட்டை, கயிறு உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கிடைக்கின்றன.
இதில், நீரா பானத்தை உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது. நீராவைப் பயன்படுத்தி வெல்லம், பாகு, சீனி உள்பட பல பொருட்கள் தயாரிக்கலாம். நீரா பானத்தை பயன்படுத்தி நீரா சக்கரை, நீரா வெல்லம், நீரா லட்டு, நீரா தேன், நீரா கேக் போன்றவை கேரளாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
விவசாயிகளுக்கு நீரா குறித்து தனிப்பயிற்சி நடத்தப்பட்டு கேரளாவில் பெரும் வெற்றியடைந்துள்ளது. தென்னை விவசாயம் பாதுகாப்புள்ளதாக தெரிகிறது.
கொச்சியில் இயங்கும் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம், கடந்த பல ஆண்டுகளாக நீரா இறக்கும் பயிற்சி, பதப்படுத்தும் தொழில்நுட்பக் கல்வி அதை மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்றும் என்பது போன்ற களப்பயிற்சிப் பட்டறைகளை ஊக்கத் தொகையுடன் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே தமிழகத்தில் நீரா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் தமிழகத்தில் தென்னை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். சர்வதேச தேங்காய் விற்பனை மையம் ஒன்றை கோவையில் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தேங்காய் எண்ணை விநியோகம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் தென்னை சாகுபடியின் பரப்பளவு ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பருவமழை குறைவு, நீர்பற்றாக்குறை, இயற்கை இடர்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் நெல் உட்பட தானியங்கள் பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைந்து வருகிறது.
மேற்கண்ட நிலங்களில் தென்னையை உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தென்னையில் இளநீர், நீரா, வெல்லம், தேங்காய், எண்ணைய், சிரட்டை, கயிறு உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கிடைக்கின்றன.
இதில், நீரா பானத்தை உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது. நீராவைப் பயன்படுத்தி வெல்லம், பாகு, சீனி உள்பட பல பொருட்கள் தயாரிக்கலாம். நீரா பானத்தை பயன்படுத்தி நீரா சக்கரை, நீரா வெல்லம், நீரா லட்டு, நீரா தேன், நீரா கேக் போன்றவை கேரளாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
விவசாயிகளுக்கு நீரா குறித்து தனிப்பயிற்சி நடத்தப்பட்டு கேரளாவில் பெரும் வெற்றியடைந்துள்ளது. தென்னை விவசாயம் பாதுகாப்புள்ளதாக தெரிகிறது.
கொச்சியில் இயங்கும் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம், கடந்த பல ஆண்டுகளாக நீரா இறக்கும் பயிற்சி, பதப்படுத்தும் தொழில்நுட்பக் கல்வி அதை மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்றும் என்பது போன்ற களப்பயிற்சிப் பட்டறைகளை ஊக்கத் தொகையுடன் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே தமிழகத்தில் நீரா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் தமிழகத்தில் தென்னை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். சர்வதேச தேங்காய் விற்பனை மையம் ஒன்றை கோவையில் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தேங்காய் எண்ணை விநியோகம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.