கோவை மாநகராட்சியில் குடிநீர், குப்பை உள்ளிட்டவற்றிற்கு வரிகள் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, சிங்காநல்லூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகராட்சி சார்பில் அண்மையில் உயர்த்தப்பட்ட குப்பை வரி, கூடுதல் குடிநீர் வைப்பு தொகை உள்ளிட்டவற்றை ரத்து செய்யக்கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், கோவை - திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டதிலும் ஈடுபட்டனர்.
சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில், மாநகராட்சி நிர்வாகம் முடங்கி இருப்பதாகவும், புதிய வரி விதிப்புகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய போராட்டக்காரர்கள், இதனை திரும்பப் பெறும் வரை போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உட்பட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி சார்பில் அண்மையில் உயர்த்தப்பட்ட குப்பை வரி, கூடுதல் குடிநீர் வைப்பு தொகை உள்ளிட்டவற்றை ரத்து செய்யக்கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், கோவை - திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டதிலும் ஈடுபட்டனர்.
சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில், மாநகராட்சி நிர்வாகம் முடங்கி இருப்பதாகவும், புதிய வரி விதிப்புகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய போராட்டக்காரர்கள், இதனை திரும்பப் பெறும் வரை போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உட்பட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.