இந்திய உணவுக் கிடங்கால் அதிகரிக்கும் செல்லுப் பூச்சிகள் - நடவடிக்கை கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

ஆவாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய உணவுக் கிடங்கினால் செல்லுப் பூச்சிகள் அதிகளவில் உற்பத்தியாகி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கோவை மாவட்டம், ஆவாரம்பாளையம் பகுதியில் இந்திய உணவுக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. 1982- ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த உணவுக் கிடங்கானாது 82 ஏக்கர் பரப்பளவில், சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் தானியங்களை இருப்பு வைக்கும் அளவிற்கு கொள்ளளவு கொண்டது.

இதனிடையே, இந்த உணவுக் கிடங்கில் சமீபகாலமாக முறையான பராமரிப்பின்றி செல்லுப் பூச்சிகள் அதிகரித்து வருகின்றது. இந்தப் பூச்சிகள் அருகாமையில் உள்ள ஸ்ரீராம்நகர், பீளமேடு, ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பரவி வருகிறது.

எனவே, இந்திய உணவுக் கிடங்கு மேலாளரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தவும், உடனடியாக அதனை கட்டுக்குள் கொண்டு வரவும் வலியுறுத்தியுள்ளேன்.

இவ்வாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக் தெரிவித்தார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...