ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாக்களை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட் பகுதியில் கூட்ட நெரிசல் அலைமோதி வருகிறது.

கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் விளையும் பூக்கள் கோவை பூமார்க்கெட் பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றன.

பொதுவாக அனைத்து பகுதிகளைக் காட்டிலும் பூமார்க்கெட் பகுதியில் பூக்கள் விலை சற்று குறைவாக இருப்பதால் விழாக் காலங்களின் போது மக்கள் பூமார்க்கெட்டை நோக்கி படையெடுப்பது வழக்கம்.

அதேபோல், வரும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பூ விற்பனையாளர்கள் பூமார்க்கெட் பகுதியில் குவிந்துள்ளனர்.
இதனிடையே, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் வாகன விபத்தை தடுக்கும் விதமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.