கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் ஞாயிறன்று (இன்று) நடைபெற்றது. 

கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் 2017-18ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஞாயிறன்று (இன்று) பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இத்தேர்தலுக்கு மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.

இதில் மன்றத்தின் தலைவராக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் சுப்புராஜ், தினமணி புகைப்படக் கலைஞர் பேச்சிக்குமார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், ஈநாடு டிஜிட்டல் செய்தியாளர் சீனிவாசன் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், நியூஸ் எக்ஸ் செய்தியாளர் சுதாகர், தினகரன் புகைப்படக் கலைஞர் கார்த்தீஸ்வரன் துணை செயலாளர்களாகவும், மன்றத்தின் பொருளாளராக தீக்கதிர் செய்தியாளர் அ.ர.பாபு தேர்வு செய்யப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களாக சன் டிவி செய்தியாளர் மார்ட்டின் ராஜா, தினகரன் செய்தியாளர் சந்துரு, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் கோமல், தீக்கதிர் செய்தியாளர் ஜீவானந்தம், நியூஸ் 7 செய்தியாளர் ஷெர்லி, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...