கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. எம்.பி.ஏ கட்டிடத்தின் மீது மரம் விழுந்து சேதம் ஏற்பட்டதுடன், தேர்வுத் துறை விடைத்தாள் அறையிலும் நீர் கசிவு ஏற்பட்டதால் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.




கோவை:

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.



குறிப்பாக, பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில், சுற்றுச்சூழல் அறிவியல் துறை கட்டிடம் மற்றும் எம்.பி.ஏ (MBA) துறை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பெரிய மரங்கள் வேரோடு சரிந்தன.



இதில், எம்.பி.ஏ துறை கட்டிடத்தின் முதல் தளத்தின் மீது ராட்சத மரம் ஒன்று முற்றிலும் சாய்ந்து விழுந்ததில், கட்டிடத்தின் கூரைத் தகடுகள் சுக்குநூறாக உடைந்தன. மேலும், மரத்தின் கிளைகள் துறை மண்டபத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தின.



இந்த சம்பவம் நேற்று மாலை 5 மணிக்குப் பிறகு நிகழ்ந்ததால், அச்சமயம் கட்டிடத்திற்குள் மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், கட்டிடத்திற்குள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், அங்கு இருந்த நாற்காலிகள், மின் விசிறிகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தேர்வுத் துறை அறைக்குள்ளும் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விடைத்தாள்கள் சேதமடைந்திருக்குமோ என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை குறித்து பல்கலைக்கழக பதிவாளர் ஆர். ராஜவேலிடம் கேட்டபோது, “சனிக்கிழமை காலை முதலே பல்கலைக்கழக வளாகத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மரங்கள் விழுந்ததால் ஏற்பட்ட கட்டமைப்பு சேதங்கள் மற்றும் தேர்வுத் துறையில் ஏற்பட்ட நீர் கசிவு குறித்து ஆய்வு செய்து, தேவையான பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...