கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் ஞாயிறன்று (இன்று) நடைபெற்றது. 

கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் 2017-18ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஞாயிறன்று (இன்று) பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இத்தேர்தலுக்கு மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.

இதில் மன்றத்தின் தலைவராக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் சுப்புராஜ், தினமணி புகைப்படக் கலைஞர் பேச்சிக்குமார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், ஈநாடு டிஜிட்டல் செய்தியாளர் சீனிவாசன் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், நியூஸ் எக்ஸ் செய்தியாளர் சுதாகர், தினகரன் புகைப்படக் கலைஞர் கார்த்தீஸ்வரன் துணை செயலாளர்களாகவும், மன்றத்தின் பொருளாளராக தீக்கதிர் செய்தியாளர் அ.ர.பாபு தேர்வு செய்யப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களாக சன் டிவி செய்தியாளர் மார்ட்டின் ராஜா, தினகரன் செய்தியாளர் சந்துரு, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் கோமல், தீக்கதிர் செய்தியாளர் ஜீவானந்தம், நியூஸ் 7 செய்தியாளர் ஷெர்லி, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...