கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி ஹெல்மெட்டுகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.


Coimbatore: இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில், தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க கண்காணிப்பு மற்றும் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இயக்குனர் கே.ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் வினித் குமார், திவ்யா மற்றும் கௌதம் சாந்த் சோனி உள்ளிட்ட குழுவினர் கோவையில் உள்ள ஒரு ஹெல்மெட் விற்பனை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் ஹெல்மெட்டுகளை பரிசோதித்ததில், ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தரமற்ற ஹெல்மெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், தரச்சான்று இல்லாத ஹெல்மெட்டுகளை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக BIS சட்டம் 2016-ன் பிரிவு 28ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து BIS அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் எந்த பொருளையும் வாங்கும் முன் அதன் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக ஹெல்மெட்டுகளில் ஐஎஸ்ஐ முத்திரை உள்ளதா என்பதை கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

மேலும், BIS CARE செயலியின் மூலம் பொருட்களின் தரச் சான்றுகளை சரிபார்த்து வாங்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...