கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு முடிந்ததும், மதுபானங்கள் பீளமேடு மண்டல குடோனுக்கு மாற்றப்பட உள்ளன.


Coimbatore:

கோவை: கோவை மாவட்டத்தில் மொத்தம் 254 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. புதிதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழக அரசு, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும் 69 கடைகள் மூடப்பட்டுள்ளன.

முதல் நாளில் 4 கடைகள், இரண்டாம் நாளில் 10 கடைகள் மூடப்பட்ட நிலையில், நேற்று மீதமிருந்த 55 கடைகளும் மூடப்பட்டன.

இந்த நிலையில், மூடப்பட்ட கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில்:

“கோவை மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக டாஸ்மாக் வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை வடக்கில் 156 கடைகளும், தெற்கில் 128 கடைகளும் என மொத்தம் 254 கடைகள் செயல்பட்டு வந்தன. தற்போது வடக்கில் 48 கடைகளும், தெற்கில் 21 கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் இனி மாவட்டத்தில் 215 டாஸ்மாக் கடைகள் மட்டுமே செயல்படும். மேலும், மூடப்பட்ட கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த 50 பார்களும் மூடப்பட்டுள்ளன.

மூடப்பட்ட 69 கடைகளிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பில் உள்ளன. அந்த இருப்புகளை கணக்கெடுக்கும் பணியில் ஒவ்வொரு கடைக்கும் இரண்டு பேர் வீதம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததும், அந்த மதுபானங்கள் பீளமேட்டில் உள்ள மண்டல டாஸ்மாக் மேலாளர் குடோனுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும்” என்றனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...