தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ்-யில் சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் தங்கமழை திட்டம் துவக்கம்


தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸில் 2017ம் ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று துவக்கி வைத்தார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிலையங்கள் மூலம் விற்கப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கைத்தறி ரகங்களுக்கு அனைத்து விற்பனை நிலையங்களிலும் 31-08-2018 வரை 30 சதவிகிம் வரை தள்ளுபடி அளித்துள்ளது.

இது குறித்து மண்டல மேலாளர் கூறியதாவது:- கோவையில் உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பட்டு சேலைகள், வேட்டி, சட்டை, குர்தீஸ், சுடிதார், படுக்கை விரிப்புகள் என அனைத்திற்கும் தள்ளுபடி உள்ளது.



பட்டு சேலைகள் 7 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை 15-ற்கும் மேற்பட்ட வகையான சேலைகள் விற்பனைக்கு உள்ளது. இதற்கு 30 சதவிகிதம் தள்ளுபடி உள்ளது. மேலும் பட்டு பூச்சிகளை கொல்லாமல் பட்டு பூச்சிகள் கூட்டை விட்டு வெளியேறிய பிறகு பட்டு நூல் எடுத்து அகிம்சா பட்டினால் தயாரிக்கப்பட்டுள்ள சேலைகள் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை மண்டலத்தில் கடந்த ஆண்டு 17 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 20 கோடியாக நிர்ணயம் செய்யபட்டுள்ளது. மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு மொத்த விற்பனை 3.81 கோடிகள், நடப்பாண்டில் விற்பனை குறியீடாக 4.65 கோடி நிர்ணயம் செய்யபட்டுள்ளது" என்றார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...