கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கம் (OSMA) சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


Coimbatore: ஜவுளித் தொழில் சார்ந்த தொழில் முனைவோருடன் மத்திய ஜவுளித்துறை ஆணையர் விருந்தா மனோகர் தேசாய் கலந்துரையாடிய நிகழ்ச்சி வியாழக்கிழமை கோவையில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின் (OSMA) நிர்வாகிகள், மத்திய ஜவுளித்துறை கமிஷனரிடம் கோரிக்கை மனு அளித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தினர்.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அருள்மொழி கூறுகையில், “கழிவுப்பஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஓபன் எண்ட் மில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, கழிவுப்பஞ்சு ஏற்றுமதிக்கு வரி விதித்து அதன் ஏற்றுமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்,” என்றார்.

மேலும், “ஓபன் எண்ட் (OE) நூல்களுக்கு தனி ‘HSN Code’ வழங்க வேண்டும் என்பதையும் மத்திய ஜவுளித்துறை கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளோம்,” என்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் சங்க நிர்வாகிகள் முருகேசன், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...