நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பு சேர முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட அரயலூர் மாவட்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் இன்று போத்தனூர் ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, எஸ்டிபிஐ கட்சியினர் ரயில் நிலையத்தின் உள்ளே நுழைந்து கோவை - பாலக்காடு பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த ரயில் முற்றுகைப் போராட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் முழக்கமிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த போராட்டம் காரணமாக கோவை - பாலக்காடு ரயில் சில நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் இன்று போத்தனூர் ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, எஸ்டிபிஐ கட்சியினர் ரயில் நிலையத்தின் உள்ளே நுழைந்து கோவை - பாலக்காடு பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த ரயில் முற்றுகைப் போராட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் முழக்கமிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த போராட்டம் காரணமாக கோவை - பாலக்காடு ரயில் சில நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.