ஆர்எஸ்.புரம் சாலையில் வேருடன் விழுந்த ராட்சத மரம்

கோவையில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று அதிகாலை முதலே, மாநகரின் சில பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. சில பகுதிகளில் பிற்பகல் முதல் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படத்துடன் மேகமும் கருமேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு கடும் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் கொட்டிய கனமழையால், மாநகர சாலைகள் வெள்ளக்காடாக மாறின.



சில பகுதிகளில் பழமையான சுவர்களும், மரங்களும் விழுந்தன. இரவு நேரம் நிகழ்ந்த இச்சம்பவத்தால் பெரும் அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டன. 

இதனிடையே, ஆர்.எஸ்.புரம், டி.பி சாலையில் ஏராளமான பழமையான நாட்டு மரங்கள் உள்ள நிலையில் மழையின் காரணமாக மண் தளர்ந்திருந்ததால் இன்று பிற்பகல் பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே வேருடன் முறிந்து விழுந்தது.



ராஜஸ்தானி அரங்கத்தின் எதிரே, காந்திபார்க்- ஆர்.எஸ்.புரத்தினை இணைக்கும் இந்த முக்கியச் சாலையில் மரம் விழுந்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.



கோவை நகரத்தின் முக்கிய பகுதியான, போக்குவரத்து மிகுந்த ஆர்.எஸ்.புரத்தில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து நீண்ட நேரம் கடந்தும் தொடர்புடைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனவும், விரைந்து மரத்தினை அகற்றி போக்குவரத்தினை சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...