வலுக்கிறது மாணவர்கள் போராட்டம்: தீர்வு என்ன ?

கோவையில் ஒரு போராட்டம் நடைபெற்றால், அது மிக விரைவாக தமிழகம் முழுவதும் பரவும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இந்த நிலையில் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிராகவும் கோவையில் போராட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பல்வேறு அமைப்புகள் முன்னெடுத்து நடத்தி வந்த இந்தப் போராட்டங்களை தற்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்  முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

நேற்று மாலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே அனைத்துக் கட்சி மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது காவலர்கள் இளைஞர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். மேலும், ஒரு சிலர் மீது லேசான தாக்குதலையும் காவல்துறையினர் நடத்தினர். அப்பொழுது அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் காவல்துறையினரிடம், 'இளைஞர்களை அடிக்க வேண்டாம்' என்று வலியுறுத்தியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்ணீர் கொடுத்து திடப்படுத்தினர்.

இப்படியாக மக்களின் ஆதரவுடன் கோவையில் தொடங்கிய போராட்டம் நொடிக்கு நொடி உயிர் பெற்று வருகிறது. நேற்று மாலை பல்வேறு கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இன்று காலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோவில்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.



வழக்கறிஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேப்போல், கோவையில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரி மாணவர்களும் நீட் தேர்வு வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காணாவிட்டால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல மீண்டுமொரு போராட்டத்தை தமிழகம் காணும் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பதவிச் சண்டை, உள்ளூர் அரசியல் என்று குழம்பிய குட்டையாக இருக்கும் தமிழக அரசியல் களத்தில் இருந்து, நீட் தேர்வு வேண்டாம் என்று மத்திய அரசை நிர்பந்திக்கும் துணிச்சல் எந்த அமைச்சருக்கு, பாராளுமன்ற உறுப்பினருக்கு உள்ளது என்பதில் ஐயப்பாடு உள்ளது.

மீண்டுமொரு போராட்டக்களத்தை காணும் முன், ஆளும் கட்சியினர் துரிதமாக செயல்பட்டு, கட்சிப் பிரச்சனைகளை ஓரம் கட்டிவிட்டு, நீட் பிரச்சனைக்கு குரல் கொடுத்தால் போராட்டங்கள் ஓயும்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...