உத்தரபிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

உத்தரபிரதேசத்தில் மாநிலம் கோரக்பூரில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த ஆகஸ்ட் 11 ம் தேதி 60 க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. நாட்டையே அதிர்ச்சியிலும், சோகத்திலும் உறைய வைத்த இந்த சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஃபரூகாபாத் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 30 குழந்தைகள், பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் பகுதியில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாகவும், 19 குழந்தைகள் பிரசவத்தின் போது அல்லது பிரசவத்திற்கு சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளன.



இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை உயர் அதிகாரிகள் மீது உத்தரபிரதேச அரசு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிலளிக்க மாவட்ட நீதிபதி ரவீந்திர குமாரும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு 19 நோட்டீஸ் அனுப்பி உள்ளார். போதிய வளர்ச்சி இன்றி பிறந்தது, மிக குறைந்த எடையுடன் பிறந்ததே குழந்தைகளின் இறப்பிற்கு காரணம் என பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் பிரிவின் பொறுப்பாளர் டாக்டர் கைலாஷ் குமார் தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து வெளிவரும் பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்கள் குறித்த தகவல்கள், மக்களை அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தி உள்ளது. இது போன்ற தொடர் சம்பவங்களுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் எனவும் சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...