நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பு சேர முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட அரயலூர் மாவட்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் இன்று வடகோவை ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, எஸ்டிபிஐ கட்சியினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தின் உள்ளே நுழைந்து மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். மேலும், இந்த ரயில் முற்றுகைப் போராட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் முழக்கமிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, வடகோவை ரயில் நிலையம் முன்பு ஏராளமான காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் தடுப்புகளை மீறி எஸ்டிபிஐ கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் இன்று வடகோவை ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, எஸ்டிபிஐ கட்சியினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தின் உள்ளே நுழைந்து மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். மேலும், இந்த ரயில் முற்றுகைப் போராட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் முழக்கமிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, வடகோவை ரயில் நிலையம் முன்பு ஏராளமான காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் தடுப்புகளை மீறி எஸ்டிபிஐ கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.