கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டாயம் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.
அதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்திருப்பது கட்டாயம்தான் என்று தெரிவித்தது. இதற்கு லாரி, டேக்சி உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இன்று முதல் (செப்டம்பர் 1) இந்த விதிகள் அனைத்தும் அமலுக்கு வர இருந்தது.
இதனிடையே, லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் சுகுமார் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி "வாகன ஓட்டிகள் கட்டாயமாக அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது அவசியம் இல்லை என்றும், இதனால் பல்வேறு இடையூறுகள், சிக்கல்கள் ஏற்படும் என்றும்" அறிவித்தார்.
நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பிற்கு லாரி உரிமையாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்திருப்பது கட்டாயம்தான் என்று தெரிவித்தது. இதற்கு லாரி, டேக்சி உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இன்று முதல் (செப்டம்பர் 1) இந்த விதிகள் அனைத்தும் அமலுக்கு வர இருந்தது.
இதனிடையே, லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் சுகுமார் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி "வாகன ஓட்டிகள் கட்டாயமாக அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது அவசியம் இல்லை என்றும், இதனால் பல்வேறு இடையூறுகள், சிக்கல்கள் ஏற்படும் என்றும்" அறிவித்தார்.
நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பிற்கு லாரி உரிமையாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.