பாட்டிலோடு வந்தவரால் பரபரப்பு- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரக்க பரக்க ஓடிய காவலர்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்களன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு அளிப்பர்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சூலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் பட்டா பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயற்சித்தனர். அவர்களை அங்கிருந்து காவலர்கள் தடுத்து இச்செயலுக்கு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு வருபர்கள் தீவிர சோதனைக்கு பிறகே மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று வழக்கம் போல் எல்லாருடைய உடைமைகளையும் சோதித்து காவலர்கள் அனுமதி அளித்துக் கொண்டிருந்தபோது பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் ஒரு பாட்டிலில் குடிநீருடன் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.



அவர் கொண்டு வந்த பாட்டிலில் மண்ணெண்ணை இருப்பதாகக் கருதி அங்கு பணியில் இருந்த ஆய்வாளர், உதவி ஆணையர் மற்றும் காவலர்கள் ஓடியதால் அவர்களுக்கு பின்னாலேயே பத்திரிகையாளர்களும் சென்றனர். பின்னர் லட்சுமணன் கொண்டு வந்திருந்தது குடி தண்ணீர் என்பதைத் தெரிந்த காவலர்கள் அசடு வழிந்தனர். 

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...