கோவை மாவட்டம், சுப்ரமணியம்பாளையம் பகுதியில் உள்ள பெஸ்ட் பீப்பில்ஸ் காலனி வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் சுதந்திரதின விழா ஆகஸ்ட் 15 அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 13ம் தேதியன்று குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், பெஸ்ட் பீப்பில்ஸ் காலனி வெல்ஃபேர் அசோசியேஷன் தலைவர் டி.மோகன் ராஜ் வரவேற்புரையாற்றினார். செயலாளர் ஏ.குமரவேல் மற்றும் உறுப்பினர் கே.சந்திரசேகரன் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வனிதா மணி நந்தகுமார் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் கோவை அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இதனைத்தொடர்ந்து, மாலை கலை நிகழ்ச்சிகளும், பரிசு வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து, பெஸ்ட் பீப்பில்ஸ் காலனி வெல்ஃபேர் அசோசியேஷன் பொருளாளர் அசோக் குமார் நன்றியுரையாற்றினார்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரிக்கால் மற்றும் சிறுதுளி மேலாண்மை இயக்குநர் வனிதா மோகன் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுடன் கலந்துரையாடி மகிழ்வித்தார்.