கோவை மாநகராட்சி ஆணையர் எழுதிய புத்தகம் ஒரு உணர்ச்சிமிகு நிகழ்வில் வெளியானது

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் எழுதிய புத்தகம் சனிக்கிழமையன்று அவரது தாயார் உமா கண்ணன் நினைவாக ஒரு உணர்ச்சிமிகு நிகழ்வில் வெளியிடப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் எழுதிய இரண்டாவது புத்தகம் "அதுவும் இதுவும்". இதனை விஜயா பதிப்பகம் பதிவிட்டுள்ளது. முன்னதாக, கோவில்பட்டி நகரில் துணை ஆட்சியராக இவர் பணியாற்றியபோது இவரது முதல் புத்தகம் வெளியிடப்பட்டது.



அரசு வேலை தொடர்பான அந்த முதல் புத்தகத்தினை விகடன் பதிப்பகம் வெளியிட்டது. 

விஜயகார்த்திகேயன் அவர்களின் தந்தை வன (நிர்வாகம்) கூடுதல் முதன்மை தலைமை ஆலோசகர், ஆர்.கண்ணன் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, தனது மகனின் வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளை விவரிக்கும் வகையில் உண்மை சம்பவங்களை விளக்கும் வகையில் இப்புத்தகம் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் மற்றும் கலைஞரான சிவக்குமார் வாழ்வில் முக்கிய 14 அம்சங்களை விளக்கினார். 



இதனைத்தொடர்ந்து, பேசிய சிறுதுளி வனிதா மோகன், க.விஜயகார்த்தியேன் அவர்களையும், அவரது புத்தகம் குறித்தும் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில், விஜயகார்த்திகேயன், மக்களை பல்வேறு விஷயங்களில் முன்னேற்றி வருவதாகவும், கற்றலை ஊக்கப்படுத்தி வருவதாகவும் வாழ்த்தி பேசினார்.

இதனை அடுத்து பேசிய க.விஜயகார்த்திகேயன், தனது நேரத்தை செலவழிப்பதற்கான ஒரு சிறந்த வழி புத்தகம் எழுதுவது என்றும், அந்த புத்தகம் பிறருக்கு பயனுள்ளதாக அமையும் வகையில் எழுதியதும் குறித்து விவரித்தார். தொடர்ந்து, இதுபோன்ற செயல்களில் மக்களும், படைப்பாளர்களும் ஈடுபடும்போது அவை மக்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்கு எடுத்துச் செல்லும் என்று கூறினார்.



மேலும், சமூகத்தில் உள்ள மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் இப்புத்தகத்தை எழுதியுள்ளதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...