சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் பாதிக்காதவகையில் விநாயகர் சதூர்த்தி கொண்டாட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

பாரம்பரியமான வழக்கப்படி சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் எந்தவிதத்திலும் பாதிக்காதவாறு விநாயகர் சதூர்த்தி தினத்தை சிறப்பாக கொண்டாடும்படி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதூர்த்தியின் போது வழக்கமாக செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர் நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், அண்மைக்காலமாக இரசாயன வர்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை வழிபட்ட பின்னர் அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் தயார் செய்வதை தவிர்க்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித இராசாயனக் கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலைக் கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே தயாரிக்க வேண்டும்.

இரசாயண வர்ணம் (பெயின்ட்) பூசி விநாயகர் சிலைகளை தயாரிப்பது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். மேற்சொன்ன விதிமுறைகளை மீறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதோடு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் இரசாயன வர்ணம் பூசி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு பயன்படுத்த தடை விதிக்கப்படும். 

எனவே, விநாயகர் சதூர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுசூழல் மற்றும் நீர்நிலைகளை எந்தவிதத்திலும் பாதிக்காதவாறு சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...