கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 46-வது வார்டுக்குட்பட்ட சித்தா தோட்டம், ராஜநாயுடு சந்து, கிருஷ்ணராஜ் காலனி ஆகிய பகுதியில் ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அதே பகுதியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், கிருஷ்ணராஜ் காலனி பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் பாலத்தின் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் கடையில் 50 மைக்ரான் குறைவாக இருந்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்த மாநகராட்சி ஆணையர் அபராதம் விதித்தார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் துணை ஆணையர் ப.காந்திமதி, நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, அதே பகுதியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், கிருஷ்ணராஜ் காலனி பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் பாலத்தின் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் கடையில் 50 மைக்ரான் குறைவாக இருந்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்த மாநகராட்சி ஆணையர் அபராதம் விதித்தார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் துணை ஆணையர் ப.காந்திமதி, நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.