கோவை-சேலம் சாலையில் கனியூர் சுங்கச்சாவடியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட சென்றபோது சேலம் செல்லும் வழியில் கோவை புறநகர் காவல்துறையினர் மு.க.ஸ்டாலினை கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் திமுக சார்பில் தூர்வரபட்டு வருகின்றன. அதன்படி, சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த எருமப்பட்டி கட்சராயன்பாளையம் ஏரி தூர்வாரப்பட்டது. இந்த ஏரியை நேரில் பார்வையிட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தின் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து கோவை-சேலம் சாலையில் கனியூர் சுங்கச்சாவடி சாலை வழியாக காரில் கொங்கணாபுரத்துக்கு வந்து கொண்டிருந்தபோது கணியூர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் திமுக சார்பில் தூர்வரபட்டு வருகின்றன. அதன்படி, சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த எருமப்பட்டி கட்சராயன்பாளையம் ஏரி தூர்வாரப்பட்டது. இந்த ஏரியை நேரில் பார்வையிட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தின் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து கோவை-சேலம் சாலையில் கனியூர் சுங்கச்சாவடி சாலை வழியாக காரில் கொங்கணாபுரத்துக்கு வந்து கொண்டிருந்தபோது கணியூர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.