டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலியை முன்னிட்டு கோவை மாவட்ட வனத்துறை, பாரதியார் பல்கலைக் கழகம் BSMED நேச்சர் கிளப், கலாம் மக்கள் அறக்கட்டளை, ரோட்டரி கிளப் ஆப் டவுன் ட்டவுன் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இணைந்து நடத்தும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்று வழங்கும் விழா இன்று காலை 10.30 மணிக்கு கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பஸ் நிறுத்தம், பாலசுந்தரம் ரோட்டில் இருந்து துவங்கியது. இப்பேரணியை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கலாம் அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க சுமார் ஐந்தாயிரம் கல்லூரி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலாம் அவர்களின் 'மாஸ்க்' அணிந்து கொண்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவங்கினர். இப்பேரணி, கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பாலசுந்தரம் ரோட்டில் இருந்து துவங்கி வ.உ.சி மைதானம் வரை சென்றடைந்தது.

இந்நிகழ்ச்சியில், வனத்துறை அலுவலர் ராஜ்குமார், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் மற்றும் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், பாரதியார் பல்கலைக்கழக இயக்குனர் விவேகானந்தன், ரோட்டரி கிளப் ஆப் டவுன் ட்டவுன் துணை ஆளுநர் காட்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கலாம் மக்கள் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் செந்தில் குமார் ஒருங்கிணைத்தார்.


கலாம் அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க சுமார் ஐந்தாயிரம் கல்லூரி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலாம் அவர்களின் 'மாஸ்க்' அணிந்து கொண்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவங்கினர். இப்பேரணி, கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பாலசுந்தரம் ரோட்டில் இருந்து துவங்கி வ.உ.சி மைதானம் வரை சென்றடைந்தது.

இந்நிகழ்ச்சியில், வனத்துறை அலுவலர் ராஜ்குமார், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் மற்றும் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், பாரதியார் பல்கலைக்கழக இயக்குனர் விவேகானந்தன், ரோட்டரி கிளப் ஆப் டவுன் ட்டவுன் துணை ஆளுநர் காட்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கலாம் மக்கள் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் செந்தில் குமார் ஒருங்கிணைத்தார்.
