சொத்து வரியுடன் குப்பை வரி, பாதாள சாக்கடை இணைப்பு வரி வசூலிக்க மாநகராட்சி முடிவு

கோவையில் இனி சொத்து வரியுடன் குப்பை வரி மற்றும் பாதாள சாக்கடை இணைப்புக்கான சேவை வரி வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பாதாள சாக்கடை இணைப்புக்கான கட்டண விவரங்கள் இறுதி செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் இத்தீர்மானம் அறிவுறுத்தப்பட்டது.

மாநகராட்சிகளில் செய்து வரும் பணிகள் நிலுவையில் உள்ள பணிகள், அதற்கான காரணங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. மாநகராட்சியின் நிதியாதாரத்தை பெருக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, வாடகை மற்றும் குத்தகை இனங்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படும் வருவாய், நடப்பாண்டு இலக்கு தெரிவிக்கப்பட்டது. 

இதில், கோவை மாநகராட்சியில் 4.89 லட்சம் வரி விதிப்புகள் உள்ளன. நடப்பாண்டு, 144 கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை, 28 கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறது. இது 20 சதவிகிதம் வரி வசூலை முடுக்கி விடுவதோடு நிதி ஆதாரத்தை பெருக்க அறிவுறுத்தப்பட்டது. அதற்கு ஒவ்வொரு வீட்டுக்கும் குப்பை வரியாக மாதத்துக்கு 10 ரூபாய் வணிக நிறுவனங்களுக்கு 50 ரூபாய் பெரிய நிறுவனங்களுக்கு கூடுதலாக நிர்ணயிக்க முடிவாகி உள்ளது.

இதன்படி கணக்கிட்டால் ஒரு மாதத்துக்கு ரூ.1.8 கோடி வீதம் ஆண்டுக்கு 21 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்தவும், இணைக்கப்பட்ட பகுதிகளில் அத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் பாதாள சாக்கடை இணைப்புக்கும் சொத்து வரிக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயித்து வசூலிக்க வேண்டும் என்றும் இதனை மாமன்றத்தில் நிறைவேற்றி நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாநகராட்சியின் நிதியாதாரத்தை பெருக்க வரி வசூலை முடுக்கி விட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வார்டு வாரியாக அனைத்து வரி விதிப்புகளும் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படும். சொத்து வரியுடன் குப்பை வரி சேர்த்து வசூலிக்கப்படும். இனிவரும் காலங்களில் பாதாள சாக்கடை இணைப்புக்கான சேவை கட்டணம் பெறப்படும். கட்டண விவரங்கள் இறுதி செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். இதன் மூலமாக மாநகராட்சிக்கு கூடுதலாக ரூ.30 கோடிக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...