கோவை மாநகராட்சி, (GIZ) என்கிற ஜெர்மன் அரசு நிறுவனம் இணைந்து நகர்புற போக்குவரத்து குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சியுடன் (GIZ) என்கிற ஜெர்மன் அரசு நிறுவனம் இணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகர்புற போக்குவரத்து மேம்படுத்துவது குறித்த முதற்கட்ட கலந்தாலோசனைக் கூட்டம் இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் தமிழக அரசு சிறப்பு செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆர்.ஜெயா தலைமையில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டம் இந்திய அரசு - ஜெர்மன் அரசு நிறுவனம் (GIZ) இணைந்து தமிழ் நாட்டில் கோவையிலும், ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரிலும், கேரள மாநிலத்தில் கொச்சினிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி அதனடிப்படையில் நகர்புற போக்குவரத்து வளர்ச்சி திட்டங்கள் குறித்து நடைபெறும் முதற்கட்ட கலந்தாலோசனை கூட்டம் ஆகும்.

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகர்புற போக்குவரத்து மேம்படுத்துவது குறித்து பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டது. அவை கோவை மாநகரில் நாளுக்கு நாள் ஏற்படும் வாகன பெருக்கத்தை மனதில் கொண்டு சாலை விரிவாக்கம் - ஸ்மார்ட் சாலைகள் அமைத்தல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

வாகனங்கள் நிறுத்துமிடம், மாசு கட்டுப்பாடு, ஒலி மாசு கட்டுப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. சாலை விபத்துகள் தவிர்ப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதசாரிக்குரிய நடைபாதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், சைக்கிள் பாதை அமைத்தல் ஆகிய தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. இத்திட்ட வரைவு உருவாக்குவதற்கு பணி சார்ந்த துறைகளுடன் நன்கு கலந்தாலோசித்து முடிவெடுக்க தமிழக அரசு சிறப்பு செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆர்.ஜெயா அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. 

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, கோவை மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா ஹரி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன், நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, போக்குவரத்துத்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், (GIZ) ஜெர்மன் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...