டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் கல்லூரி மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுரை

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று மாநகராட்சியில் பணிபுரியும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், கொங்கு நர்சிங் கல்லூரி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் 100 நபர்களுடன் மத்திய மண்டலம் சங்கனூர் மற்றும் இரத்தினபுரி பகுதியில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வீடு வீடாக சென்று துப்புரவு பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சிறப்பு டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம் குனியமுத்தூர் பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள், கல்லூரி மாணவர்களைக் கொண்டு நடைபெற்ற சிறப்பு டெங்கு தடுப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர் ஆய்வு மேற்கொண்டனர். 

இச்சிறப்பு டெங்கு தடுப்பு பணிகள் மாநகராட்சியின் ஐந்து மண்டல பகுதிகளில் நடைபெற்றது. அவைகளில் மத்திய மண்டலத்தில் சங்கனூர் மற்றும் இரத்தினபுரி இடங்களில் கொங்கு நர்சிங் கல்லூரி மாணவர்கள் 100 பேரும், டிபிசி பணியாளர்களும் 100 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 4890. தெற்கு மண்டலத்தில் குனியமுத்தூர் இடத்தில் நேரு கல்லூரி மாணவர்கள் 100 பேரும் டிபிசி பணியாளர்களும் 60 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1643.

கிழக்கு மண்டலத்தில் நேரு நகர் மற்றும் காளப்பட்டி இடங்களில் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 100 பேரும் டிபிசி பணியாளர்களும் 65 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 3015. மேற்கு மண்டலத்தில் கல்வீராம் பாளையம், பொம்மனாம் பாளையம், ஓணாம்பாளையம் இடங்களில் இராமலிங்க சௌடேஸ்வரி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 120 பேரும் டிபிசி பணியாளர்களும் 50 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1320. 

வடக்கு மண்டலத்தில் காந்திமா நகர் இடத்தில் சி.எம்.எஸ். கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 100 பேரும் டிபிசி பணியாளர்களும் 100 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 2525. இனி வரும் காலங்களில் மாநகராட்சி ஐந்து மண்டல பகுதிகளில் உள்ள இடங்களில் இப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்தார்.

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மற்றும் மேற்கு மண்டல உதவி ஆணையாளர் (பொ) டி.ஆர்.ரவி, வடக்கு மண்டல உதவி ஆணையாளர் (பொ) சரவணன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...