கோவை காந்திபார்க் பகுதியில் சாட்டையடித்து பிழைப்பு நடத்தும் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் சாலையோரம் வசித்து வருகின்றனர்.

இவர்கள் அப்பகுதியில் உள்ள பிளாட்பாரம் மற்றும் சுற்று பகுதிகளில் வசித்து வரும் நிலையில் தாங்கள் குடிசை அமைத்து வாழ ஏதாவது ஒரு இடத்தில் மாவட்ட நிர்வாகம் இடம் வழங்க வேண்டும் என பலமுறை மனு அளித்துள்ளனர்.

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு குடும்பம் சகிதமாக வந்தவர்கள் நுழைவுவாயில் முன்பு சாட்டை அடித்து ஆடி உடனடியாக ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- மழை மற்றும் வெயில் காலங்களில் தாங்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். பெண்கள் குளிப்பதற்கோ உடை மாற்றுவதற்கோ மறைவிடம் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர். தங்களுக்கு பட்டா ஒதுக்கீடு செய்து இருப்பிடத்திற்கு வழி செய்து தர வேண்டும்.
மேலும் தங்களுடைய வருங்கால சந்ததிகள் தாங்கள் செய்து வரும் சாட்டியடியை கைவிட்டு கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும். தங்களது சமூகத்தில் முன்னோடியாக ஒரு இளைஞர் கல்லூரி படிப்பை முடித்து தற்போது அரசு தேர்விற்கு பயின்று வருகிறார். தங்களுடைய சமூகம் மிகவும் பிந்தங்கிய நிலையில் உள்ள நிலையில் பிளாட்பாரங்களில் தங்குவதால் மற்றவர்கள் தங்களை ஏளனமாக பார்ப்பது வேதனையளிக்கிறது என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

இவர்கள் அப்பகுதியில் உள்ள பிளாட்பாரம் மற்றும் சுற்று பகுதிகளில் வசித்து வரும் நிலையில் தாங்கள் குடிசை அமைத்து வாழ ஏதாவது ஒரு இடத்தில் மாவட்ட நிர்வாகம் இடம் வழங்க வேண்டும் என பலமுறை மனு அளித்துள்ளனர்.

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு குடும்பம் சகிதமாக வந்தவர்கள் நுழைவுவாயில் முன்பு சாட்டை அடித்து ஆடி உடனடியாக ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- மழை மற்றும் வெயில் காலங்களில் தாங்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். பெண்கள் குளிப்பதற்கோ உடை மாற்றுவதற்கோ மறைவிடம் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர். தங்களுக்கு பட்டா ஒதுக்கீடு செய்து இருப்பிடத்திற்கு வழி செய்து தர வேண்டும்.
மேலும் தங்களுடைய வருங்கால சந்ததிகள் தாங்கள் செய்து வரும் சாட்டியடியை கைவிட்டு கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும். தங்களது சமூகத்தில் முன்னோடியாக ஒரு இளைஞர் கல்லூரி படிப்பை முடித்து தற்போது அரசு தேர்விற்கு பயின்று வருகிறார். தங்களுடைய சமூகம் மிகவும் பிந்தங்கிய நிலையில் உள்ள நிலையில் பிளாட்பாரங்களில் தங்குவதால் மற்றவர்கள் தங்களை ஏளனமாக பார்ப்பது வேதனையளிக்கிறது என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.