கோவை பொள்ளாச்சி சாலையில் மீண்டும் துவங்கியது பேருந்துகளுக்கிடையேயான போட்டி

கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கும் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி சாலை விரிவாக்க பணிகள் தற்போது நடந்துtU;k சூழலில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அசுர வேகத்தில் போட்டி போட்டுக்கொண்டு செல்வதால் சாலையில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரு பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு பொள்ளாச்சி சாலையில் சென்றது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களில் ஒளிபரப்பியதைத் தொடர்ந்து போக்குவரத்து துறையினர் சம்பந்தப்பட்ட அந்த இரு பேருந்துகளின் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து பொள்ளாச்சி உதவி ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வேகமாக சென்ற ஏழு பேருந்துகளை பிடித்து அபராதம் விதித்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு ஓரிரு நாட்கள் மட்டும் குறைவான வேகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை போல் மீண்டும் தற்போது உடுமலை, பழனி செல்லும் பேருந்துகள் கிணத்துக்கடவு பகுதியை தாண்டியவுடன் அதிவேகமாக இயக்குவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலை தொடர்ந்தால் பேருந்தில் பயணிக்கும் மக்களின் உயிர்க்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை ஏற்படும். ஆகவே வேகமாக செல்லும் பேருந்துகள் மீது அரசியல் தலையீடுகளை தவிர்த்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்திரவிட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...