எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக செயல்பட்ட தி.மு.க., இனி சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட்டு, மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடும் என்று தெரிவித்துள்ளார்.


சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவில், தி.மு.க. பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது. அதே நேரத்தில், விஜயின் தமிழக வெற்றி கழகம் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு புதிய கட்சிக்கு இத்தகைய ஆதரவு கிடைத்துள்ளது நாடு தழுவிய பேசு பொருளாக மாறியுள்ளது.

கூடுதலாக, தி.மு.க. தலைவரான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியிருப்பது கட்சியினரிடையே கூடுதல் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்:

“மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடையச் செய்தோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளை எடுத்துரைத்தே வாக்குகளை கேட்டோம்.

மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்பதற்காகவே வாக்கு கேட்டு பரப்புரை செய்தோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காமல் இருந்தவர்களையும் சேர்த்தே நான் ஆட்சி நடத்தினேன்.

அனைத்து மக்களிடமும் உண்மையுடன் இருந்தேன். என் மனச்சாட்சிப்படி செயல்பட்டேன்.

என் சக்திக்கு மீறியும் உழைத்தேன். என்னைப் போலவே tireless-ஆக உழைத்த, என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!

எனது அரசியல் பொதுவாழ்வில் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.

எனவே, இலட்சியமும் கொள்கையும் தான் முக்கியம்; வெற்றி, தோல்விகள் மட்டும் அல்ல என்பதில் உறுதியாக செயல்படுகிறவன் நான்.

அதனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் எந்தத் தடையும் இன்றி தொடரும்.

இதுவரை மக்களுக்காக சிறப்பான ஆளும் கட்சியாக செயல்பட்ட தி.மு.க., இனி சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட்டு, மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடும்.” என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...