சுகாதார வசதியின்றி பாதிக்கபட்டு வருவதாகக் கூறி தமிழ் புலிகள் கட்சியினர் இன்று உடலில் கொசு வலை போர்தியபடி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் சிறிது நேரம் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சி 16-வது வார்டு ராஜீவ்காந்தி நகர் பகுதியில் 350-ம் மேற்பட்ட குடும்பங்களாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் தொடர்ந்து மறுக்கபட்டு வருவதாக இன்று தமிழ் புலிகள் அமைப்பினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது குறித்து தமிர் புலிகள் அமைப்பினர் கூறுகையில், தங்கள் பகுதியில் உள்ள பொது கழிப்பிட செப்டிக் டேங் நிரம்பி வழிந்து வீதிகளில் ஓடுகிறது. இது குறித்து புகார் அளித்தும் கடந்த 4 மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது.
மேலும், வீதிமுழுவதும் துர்நாற்றம் வீசுவதால் குடியிருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி சுகாதார அதிகாரிகளிடம் இது தொடர்பாக மனு அளித்தால் அலட்சிய போக்குடன் நடந்து கொள்கின்றனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகவே, ஆட்சியரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உடலில் கொ வலையினை போர்த்தியபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம்' என தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சி 16-வது வார்டு ராஜீவ்காந்தி நகர் பகுதியில் 350-ம் மேற்பட்ட குடும்பங்களாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் தொடர்ந்து மறுக்கபட்டு வருவதாக இன்று தமிழ் புலிகள் அமைப்பினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது குறித்து தமிர் புலிகள் அமைப்பினர் கூறுகையில், தங்கள் பகுதியில் உள்ள பொது கழிப்பிட செப்டிக் டேங் நிரம்பி வழிந்து வீதிகளில் ஓடுகிறது. இது குறித்து புகார் அளித்தும் கடந்த 4 மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது.
மேலும், வீதிமுழுவதும் துர்நாற்றம் வீசுவதால் குடியிருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி சுகாதார அதிகாரிகளிடம் இது தொடர்பாக மனு அளித்தால் அலட்சிய போக்குடன் நடந்து கொள்கின்றனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகவே, ஆட்சியரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உடலில் கொ வலையினை போர்த்தியபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம்' என தெரிவித்தனர்.