வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான் முன்பதிவுகள் ஆரம்பம்

கோவை மாரத்தான் நிகழ்வின் 5-வது பதிப்பு நடைபெறவிருப்பதை கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் இன்று அறிவித்தது. இந்நிகழ்வின் டைட்டில் ஸ்பான்சராக வோடஃபோன் மற்றும் பவர்டு பை ஸ்பான்சராக எல்ஜி எக்விப்மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இடம்பெறுகின்றன. இதுவரை நடத்தப்பட்ட முந்தைய 4 பதிப்புகளைவிட மிகப்பெரியதாக நடத்தப்படவிருக்கும் இந்த ஆண்டின் மாரத்தான் 2017 அக்டோபர் 1ம் தேதி நடைபெறுகிறது.

"பெருமைகொள்ளுங்கள்" என்ற கருப்பொருளை தாங்கிய இந்த முதன்மையான ஓட்ட நிகழ்வானது, 15000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்கேற்பாளர்களுள் நாடெங்கிலும் இருந்து விளையாட்டு வீரர்கள், கார்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் ஓடுவதில் ஆர்வமுள்ள நபர்கள் என பலரும் இடம்பெறுகின்றனர்.

வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான் 2017 நிகழ்வில் பங்கேற்பதற்கான முன்பதிவுகள் இப்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. பதிவு செயல்முறைகளை www.coimbatoremarathon.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த மாரத்தான் போட்டியில் அரை மாரத்தான் (21.1 கி.மீ), 10 கி.மீ. ஓட்டம் மற்றும் 5 கி.மீ. ஓட்டம் மற்றும் நடை ஆகிய வகையினங்களை உள்ளடக்கியதாகும். அரை மாரத்தான் மற்றும் 10 கிமீ ஓட்டத்திற்கான பதிவுக்கட்டணம் ரூ.800 ஆகும். 5 கிமீ ஓட்டம் மற்றும் நடைக்கான பதிவுக்கட்டணம் ரூ.550 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செல்லத்தக்க மாணவர் அடையாள அட்டையை சமர்ப்பித்து இக்கட்டணத்தில் ரூ.100 தள்ளுபடியை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

2.7 லட்சம் என்ற மொத்த பரிசுத்தொகையானது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியான வகையினங்களில் வெற்றிபெறும் நபர்களுக்கு வழங்கப்படும். 21.1 கிமீ தூரம் கொண்ட பாதி மாரத்தான் ஓட்டத்தில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெறுபவர்களுக்கு இந்த பரிசுத் தொகையானது முறையே ரூ.25,000, 15,000 மற்றும் 10,000 வழங்கப்படும். 

10 கிமீ திறந்தநிலை வகையினத்தில் வெற்றிபெறும் முதல் மூன்று வீரர்களுக்கான பரிசுத்தொகை முறையே ரூ.15,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 வழங்கப்படும். 

மேலும், பல்வேறு பிரிவுகளாக நடைபெறவுள்ள இந்த மாரத்தான் போட்டியின் போது பரிசுகளும், பதங்கங்களும் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து மேலும் தகவலுக்கு 918939801188 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...