பொள்ளாச்சியைச் சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் மூச்சுக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 28ம் தேதியன்று கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இரத்தக் குழாயில் இரத்தம் வெளியேறிவருவதை கண்டறிந்தனர்.
பின், அந்த இரத்தக் குழாயினை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதில், இரண்டு குழாயில் ஒரு குழாய் மட்டுமே செயல்பட்டு வந்தது. மற்றொரு குழாய் செயல்படாமல் இருந்துள்ளது. பின், இரத்தம் வெளியேறிவந்த குழாய் சிகிச்சை மூலம் மாற்றப்பட்டது.
பெண்டல் எனப்படும் இந்த சிகிச்சை பிஎஸ்ஜி மருத்துவமனையின் சிடிவிஎஸ் குழுவினர் தமிழக முதலமைச்சரின் மருத்துவக் காப்பிட்டுத் திட்டத்தின் கீழ் செய்து சாதனை படைத்துள்ளனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சிகிச்சைக்குப் பின் அந்த நபர் பூரண குணமடைந்தார்.
தொடர்ந்து, ஒருவாரகாலம் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நபர் இன்று நல்ல நிலையில் வீடுதிரும்பினார்.
இந்த பெண்டல் சிகிச்சை 500-யில் இருந்து ஆயிரம் இதய சிகிச்சையில் ஏதேனும் ஒன்றே வரும். இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் பிஎஸ்ஜி மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பிலும் இருந்து வருகின்றனர்.
இந்த சிகிச்சை குறித்து மேலும், தகவலுக்கு பிஎஸ்ஜி மருத்துவமனை, சிடிவிஎஸ் துறை பேராசிரியர், தலைவர் மருத்துவர் பி.ஆர்.முருகேசன் என்பவரை அணுகலாம்.
பின், அந்த இரத்தக் குழாயினை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதில், இரண்டு குழாயில் ஒரு குழாய் மட்டுமே செயல்பட்டு வந்தது. மற்றொரு குழாய் செயல்படாமல் இருந்துள்ளது. பின், இரத்தம் வெளியேறிவந்த குழாய் சிகிச்சை மூலம் மாற்றப்பட்டது.
பெண்டல் எனப்படும் இந்த சிகிச்சை பிஎஸ்ஜி மருத்துவமனையின் சிடிவிஎஸ் குழுவினர் தமிழக முதலமைச்சரின் மருத்துவக் காப்பிட்டுத் திட்டத்தின் கீழ் செய்து சாதனை படைத்துள்ளனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சிகிச்சைக்குப் பின் அந்த நபர் பூரண குணமடைந்தார்.
தொடர்ந்து, ஒருவாரகாலம் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நபர் இன்று நல்ல நிலையில் வீடுதிரும்பினார்.
இந்த பெண்டல் சிகிச்சை 500-யில் இருந்து ஆயிரம் இதய சிகிச்சையில் ஏதேனும் ஒன்றே வரும். இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் பிஎஸ்ஜி மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பிலும் இருந்து வருகின்றனர்.
இந்த சிகிச்சை குறித்து மேலும், தகவலுக்கு பிஎஸ்ஜி மருத்துவமனை, சிடிவிஎஸ் துறை பேராசிரியர், தலைவர் மருத்துவர் பி.ஆர்.முருகேசன் என்பவரை அணுகலாம்.